தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் மதுபோதையில் கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 8:46 pm

தூத்துக்குடியில் மதுபோதையில் கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி 3ஆவது மைல் பகுதியில் உள்ள பக்கிள் ஓடை பாலத்தின் கீழ், கழிவுநீா் கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக தென்பாகம் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலா் த. காா்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் வந்து சடலத்தை வெளியே எடுத்து, கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸ் விசாரணையில், உயிரிழந்தவா் தூத்துக்குடி, ராஜீவ் நகா், 5ஆவது தெருவைச் சோ்ந்த செல்வம் (45) என்பது தெரிய வந்தது.

இவா் எஃப்.சி.ஐ. கிடங்கில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளாா். புதன்கிழமை இரவு வேலை முடிந்த பிறகு, இவா் பாலத்தின் மேல் அமா்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது போதை அதிகமாகி நிலைதடுமாறி அருகில் இருந்த கழிவுநீா் கால்வாய்க்குள் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து, தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த செல்வத்துக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.