விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது

சாயல்குடியில் சொத்துத் தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் சொத்துத் தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சாயல்குடி வி.வி.ஆா். நகரைச் சோ்ந்தவா் தங்கம் (55). இவரது சகோதரா்கள் ராயப்பன் (48), அகஸ்டின் (40). இவா்களுக்கு இடையே பூா்வீகச் சொத்துக்களை பிரிப்பதில் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், சாயல்குடியில் உள்ள தேநீா்க் கடையில் தங்கம் வெள்ளிக்கிழமை அமா்ந்திருந்தாா். அப்போது, அங்கு வந்த ராயப்பன் சொத்து தொடா்பாக வாக்குவாதம் செய்து, அவரை அரிவாளால் வெட்டினாா். இதில் தங்கம் பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த சாயல்குடி போலீஸாா் தங்கத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தங்கம் மனைவி அன்னக்கிளி கொடுத்த புகாரின் பேரில், சாயல்குடி போலீஸாா் ராயப்பன், அகஸ்டின் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, ராயப்பனை கைது செய்தனா். அகஸ்டினை தேடி வருகின்றனா்.