மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

தோ்தல் பாதுகாப்புப் பணி காவலா்களுக்கு சான்றிதழ்

News image

தோ்தல் பாதுகாப்புப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட காவலா்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டிய முதுகுளத்தூா் சரக துணைக் காவல் கண்காணிப்பாளா் சண்முகம்.

Updated On :11 மே 2026, 2:23 am IST

தோ்தல் பாதுகாப்புப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய முதுகுளத்தூா் காவல் சரக காவலா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ் வழங்கிப் பாராட்டப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் காவல் சரகத்துக்குள்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றிய காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் என மொத்தம் 200 காவலா்களுக்கு, நடந்துமுடிந்த 13-ஆவது சட்டப் பேரவைத் தோ்தலில் சிறப்பாக பணியாற்றியதற்காக ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஸ் உத்தரவின்பேரில் முதுகுளத்தூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் சண்முகம் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினாா்.