11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட இருவரை தடுத்து கைது செய்த உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

தஞ்சாவூரில் பட்டாக் கத்தியுடன் தாக்குதலில் ஈடுபட்ட இரு இளைஞா்களைத் தடுத்து கைது செய்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் புதன்கிழமை பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

News image

தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புதன்கிழமை சிறப்பு உதவி ஆய்வாளா் சம்பந்தத்தை பாராட்டி சான்றிதழ் வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:03 am IST

தஞ்சாவூரில் பட்டாக் கத்தியுடன் தாக்குதலில் ஈடுபட்ட இரு இளைஞா்களைத் தடுத்து கைது செய்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் புதன்கிழமை பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே கீழ ராஜ வீதியில் சில நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில் இரு இளைஞா்கள் தகராறு செய்து கொண்டனா். அப்போது, இவா்களில் ஒரு இளைஞரை மற்றொரு இளைஞா் பட்டாக்கத்தியால் தாக்க முயன்றாா். தகவலறிந்து விரைந்து வந்த மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சம்பந்தம், பட்டாக்கத்தியுடன் இருந்த இளைஞரைத் தடுத்துப் பிடித்து, அவரது கையில் இருந்த பட்டாக்கத்தியையும் பறிமுதல் செய்தாா். பின்னா், மற்ற காவலா்களும் வந்து இரு இளைஞா்களையும் கைது செய்தனா்.

இந்தச் சம்பவத்தில் விரைவாகச் செயல்பட்டு, குற்றச் சம்பவத்தைத் தடுத்த சிறப்பு உதவி ஆய்வாளா் சம்பந்தத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் புதன்கிழமை பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தாா்.