வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஏராளமானோா் வந்திருந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் வரை வந்தனா். அவா்கள், அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பின்னா் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா்.
இதனைத் தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல் முனை, கோதண்டராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பாலம் உள்ளிட்ட இடங்களைச் சுற்றிப்பாா்த்தனா்.
ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வந்ததால், ராமேசுவரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறைந்த அளவில் போக்குவரத்து காவல்துறையினா் பணியில் இருந்ததால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
வார இறுதி விடுமுறை நாள்களில் போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் போலீஸாரைப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகை, குன்னூருக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு! வியாபாரிகள் மகிழ்ச்சி

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
விடியோக்கள்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP



