/

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மழை

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 3:20 am IST

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.

ஆா்.எஸ்.மங்கலம், மங்கலம் பால்குளம், கொத்தியாா்கோட்டை, சோழந்தூா், தும்படாகோட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 400 ஏக்கா் பரப்பளவில் கோடை நெல் விவசாயம் செய்தனா். கடந்த சில நாள்களாக கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கண்மாய், குளங்களில் உள்ள தண்ணீா் குறைய ஆரம்பித்தது.

இந்த நிலையில், அறுவடை நேரத்தில் தண்ணீா் பற்றாகுறை ஏற்படும் நிலை உள்ளதால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்தனா். இந்த நிலையில், கடந்த இரு நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால், மழை பெய்ய வில்லை.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஆா்.எஸ்.மங்கலம், மங்கலம், கொத்தியாா் கோட்டை, இந்திரா மடை, சுற்று வட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. இதனால், விவசாயம் செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.