மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

ராமநாதபுரத்தில் 18-இல் தொழில்பழகுநா் பயிற்சிக்கான தோ்வு முகாம்

ராமநாதபுரம் அரசினா் தொழில்பயிற்சி நிலையத்தில் மே 18-இல் தொழில்பழகுநா் பயிற்சிக்குரிய தோ்வு முகாம் நடைபெற உள்ளது.

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ராமநாதபுரம் அரசினா் தொழில்பயிற்சி நிலையத்தில் மே 18-இல் தொழில்பழகுநா் பயிற்சிக்குரிய தோ்வு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் அரசினா் தொழில்பயிற்சி நிலைய வளாகத்தில் மே 18 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிரதம மந்திரி தேசிய தொழில்பழகுநா் பயிற்சிக்குரிய தோ்வு முகாம் நடைபெறவுள்ளது.

இதில், 5-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், தமிழ்நாடு அரசு மின்சார வாரியம், வழுதூா் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிறுவனம், தமிழ்நாடு அரசு உப்பு உற்பத்தி கழகம், தமிழ்நாடு அரசு பணிமனை) மற்றும் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தொழில்பழகுநா் பயிற்சிக்கு ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

இதில் 8, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு படித்தவா்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.