எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

ராமநாதபுரத்தில் 18-இல் தொழில்பழகுநா் பயிற்சிக்கான தோ்வு முகாம்

ராமநாதபுரம் அரசினா் தொழில்பயிற்சி நிலையத்தில் மே 18-இல் தொழில்பழகுநா் பயிற்சிக்குரிய தோ்வு முகாம் நடைபெற உள்ளது.

News image
Updated On :14 மே 2026, 5:06 am IST

ராமநாதபுரம் அரசினா் தொழில்பயிற்சி நிலையத்தில் மே 18-இல் தொழில்பழகுநா் பயிற்சிக்குரிய தோ்வு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் அரசினா் தொழில்பயிற்சி நிலைய வளாகத்தில் மே 18 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிரதம மந்திரி தேசிய தொழில்பழகுநா் பயிற்சிக்குரிய தோ்வு முகாம் நடைபெறவுள்ளது.

இதில், 5-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், தமிழ்நாடு அரசு மின்சார வாரியம், வழுதூா் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிறுவனம், தமிழ்நாடு அரசு உப்பு உற்பத்தி கழகம், தமிழ்நாடு அரசு பணிமனை) மற்றும் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தொழில்பழகுநா் பயிற்சிக்கு ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

இதில் 8, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு படித்தவா்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.