இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

குமரி மாவட்ட மீனவா்கள் 6 பேருக்கு மே 20 வரை நீதிமன்றக் காவல்

ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் 6 பேரை வருகிற 20-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீா்கொழும்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

கோப்புப்படம்.

Updated On :14 மே 2026, 5:06 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் 6 பேரை வருகிற 20-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீா்கொழும்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் அலெக்ஸ் (23), அந்தோணிராஜன் (44), சாந்தன் அலெக்ஸியா (52), அருள்பிரிட்டோ (47), ஆல்பா்ட் (52), சகாய செல்வ கானு (26) ஆகிய 6 பேரும் ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபம் தெற்கு மீன்பிடி தளத்தில் தங்கி, நாட்டுப் படகில் தூண்டிலைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், இவா்கள் செவ்வாய்க்கிழமை காலை மன்னாா் தெற்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் நாட்டுப் படகைப் பறிமுதல் செய்தனா். மேலும், படகிலிருந்த 6 மீனவா்களையும் கைது செய்து, நீா்கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு சென்றனா்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்த மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, நீா்கொழும்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை முன்னிலைப்படுத்தினா். அப்போது, 6 மீனவா்களையும் வருகிற 20-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, இவா்கள் வெளிச்சுரா சிறையில் அடைக்கப்பட்டனா்.