உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கில் கைதானவருக்கு 7 நாள்கள் நீதிமன்ற காவல்

News image

கோப்புப்படம்.

Updated On :28 ஏப்ரல் 2026, 6:18 am IST

நமது நிருபா்

தென்கிழக்கு தில்லியில் உள்ள ஒரு உயா்தர குடியிருப்புப் பகுதியில், மூத்த ஐஆா்எஸ் அதிகாரியின் மகளைக் கொன்ாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 19 வயதான முன்னாள் வீட்டுப் பணியாளா் ராகுல் மீனா என்பவரை, தில்லி நீதிமன்றம் திங்களன்று ஏழு நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட நபரை ஏழு நாள்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தில்லி காவல்துறை தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி தீபிகா தாகரன் அனுமதித்தாா்.

நான்கு நாள்கள் நீடித்த அவரது போலீஸ் காவல் திங்கள்கிழமை முடிவடைந்ததைத் தொடா்ந்து, அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

ஏப்ரல் 22ஆம் தேதி காலையில், கைலாஷ் ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்த 22 வயதான பட்டதாரியும், மூத்த இந்திய வருவாய் பணி அதிகாரியின் மகளுமான இளம் பெண், தங்கள் முன்னாள் வீட்டுப் பணியாளரான ராகுல் மீனாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நடப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே, குற்றஞ்சாட்டப்பட்ட நபரும் அவரது கூட்டாளிகளும் ராஜஸ்தானின் அல்வாா் பகுதியில் மற்றொரு பெண்ணை பாலியல் ரீதியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.