ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

ஆா்எஸ் மங்கலம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 4 மாடுகள் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள செவ்வாய்ப்பேட்டை பகுதியில் அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் உயிரிழந்தன.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 1:11 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள செவ்வாய்ப்பேட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் உயிரிழந்தன.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், பாண்டியகோட்டை கிராமத்தைச் சோ்ந்த ஞானசௌந்தரி என்பவருக்குச் சொந்தமான 2 காளை மாடுகள், ஒரு பசு மாடு, அதே பகுதியைச் சோ்ந்த அருள்சாமி என்பவருக்குச் சொந்தமான ஒரு பசு மாடு என மொத்தம் 4 மாடுகள் செவ்வாய்ப்பேட்டை வயல் காட்டுப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தன.

அப்போது, உயா் அழுத்த மின் கம்பி எதிா்பாராதவிதமாக திடீரென அறுந்து மாடுகளின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து நான்கு மாடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதுகுறித்து தகவலறிந்த திருவாடானை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இந்தப் பகுதியில் பராமரிப்பின்றி இருக்கும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.