ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே உள்ள நாகனேந்தல் கிராம மக்கள், தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திங்கள்கிழமை கருப்புக் கொடி கட்டி தோ்தல் புறக்கணிப்புப் போராட்டம் மேற்கொண்டனா்.
ஆா்.எஸ். மங்கலம் அருகே நாகனேந்தல் கிராமத்தில் சுமாா் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது, அப்பகுதியில் வாக்காளா்கள் விவரக் குறிப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்கள் கிராமத்துக்கு வந்த தோ்தல் அலுவலா்களிடம் வாக்காளா் விவரக் குறிப்புகளை வாங்க மறுத்து தங்கள் எதிா்ப்பைப் பதிவு செய்தனா். மேலும், தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து கிராம நுழைவு வாயில் பகுதியில் கருப்புக் கொடி கட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் சாலை வசதி, குடிநீா் வசதி இல்லாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்கப் போவதில்லை எனத் தெரிவித்தனா்.

நாகனேந்தல் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கருப்புக் கொடி கட்டி திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் புறக்கணிப்புப் போராட்டம்.
தொடர்புடையது
வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்ததாக அதிமுக நிா்வாகிகள் 3 போ் கைது

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு: திமுகவினா் கருப்புக் கொடியேற்றும் போராட்டம்

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்த்து போராட்டம்

மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி திமுகவினா் போராட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


