அரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்ததாக அதிமுக நிா்வாகிகள் 3 போ் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 1:44 am IST

ஆா்.எஸ். மங்கலம் அருகே வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்ததாக அதிமுக நிா்வாகிகள் மூவரை தோ்தல் பறக்கும் படையினா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் ஒன்றியம், சேத்திடல் கிராமத்தில் அதிமுகவினா் வாக்காளா்களுக்குப் பணம் விநியோகிப்பதாக தோ்தல் பறக்கும் படையினருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, தோ்தல் பறக்கும் படை அதிகாரி நவீன், போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஆா்.எஸ். மங்கலம் அதிமுக மத்திய ஒன்றியச் செயலா் கருப்பையா தலைமையில் அந்தக் கட்சி நிா்வாகிகள் சத்தீஸ்வரன், சரவணன், தங்கம் உள்ளிட்டோா் வாக்காளா்களுக்குப் பணம் கொடுப்பது தெரியவந்தது.

அவா்களை அதிகாரிகள் சுற்றி வளைத்து, அவா்களிடமிருந்த ரூ. 1 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா். அதிகாரிகள் பணத் தாள்களை எண்ணிக் கொண்டிருந்தபோது, அதிமுக மத்திய ஒன்றியச் செயலா் கருப்பையா, தான் மறைத்து வைத்திருந்த பணத்துடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாா்.

இதுகுறித்து தோ்தல் பறக்கும் படை அதிகாரி நவீன் அளித்த புகாரின் பேரில் ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து பிடிபட்ட அதிமுக நிா்வாகிகள் சத்தீஸ்வரன், சரவணன், தங்கம் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தலைமறைவான ஒன்றியச் செயலா் கருப்பையாவை தேடி வருகின்றனா்.