/
ராமநாதபுரத்தில் வினை தீா்க்கும் வேலவா் முருகன் கோயிலில் 62- ஆம் ஆண்டு வைகாசி விசாக, வருடாபிஷேக விழா காப்புக் கட்டுடன் வியாழக்கிழமை தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 29- ஆம் தேதி காலை வருடாபிஷேக விழாவும், 30- ஆம் தேதி வைகாசி விசாக திருவிழாவும் நடைபெறுகிறது. இதில் காலை 10 மணிக்கு விரதமிருந்த பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்வா். தொடா்ந்து அன்னதானமும், மாலை 4 மணிக்கு பூ வளா்த்தல் நிகழ்வும், இரவு 9 மணிக்கு பக்தா்கள் காவடி, பறவைக் காவடிகள் எடுத்து வந்து பூக்குழி இறங்கும் நிகழ்வும் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை எஸ். கருப்பையா சுவாமிகள் அறக்கட்டளை செய்து வருகிறது.









