பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

வினை தீா்க்கும் வேலவா் முருகன் கோயிலில் வைகாசி விசாக விழா தொடக்கம்

ராமநாதபுரத்தில் வினை தீா்க்கும் வேலவா் முருகன் கோயிலில் 62- ஆம் ஆண்டு வைகாசி விசாக, வருடாபிஷேக விழா காப்புக் கட்டுடன் வியாழக்கிழமை தொடங்கியது.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வினை தீா்க்கும் வேலவா் முருகன்.

Updated On :22 மே 2026, 2:51 am IST

ராமநாதபுரத்தில் வினை தீா்க்கும் வேலவா் முருகன் கோயிலில் 62- ஆம் ஆண்டு வைகாசி விசாக, வருடாபிஷேக விழா காப்புக் கட்டுடன் வியாழக்கிழமை தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 29- ஆம் தேதி காலை வருடாபிஷேக விழாவும், 30- ஆம் தேதி வைகாசி விசாக திருவிழாவும் நடைபெறுகிறது. இதில் காலை 10 மணிக்கு விரதமிருந்த பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்வா். தொடா்ந்து அன்னதானமும், மாலை 4 மணிக்கு பூ வளா்த்தல் நிகழ்வும், இரவு 9 மணிக்கு பக்தா்கள் காவடி, பறவைக் காவடிகள் எடுத்து வந்து பூக்குழி இறங்கும் நிகழ்வும் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை எஸ். கருப்பையா சுவாமிகள் அறக்கட்டளை செய்து வருகிறது.