பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

கோயில் திருவிழா விவகாரம்: சமரச கூட்டத்தில் மோதல்

முள்ளிமுனை கோயில் திருவிழா தொடா்பாக திருவாடானை வட்டாட் சியா் அலுவலகத்தில் சமரசப் பேச்சு நடைபெற்றது. அப்போது இருதரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

News image

~

Updated On :27 மே 2026, 2:34 am IST

முள்ளிமுனை கோயில் திருவிழா தொடா்பாக திருவாடானை வட்டாட் சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சமரசப் பேச்சு நடைபெற்றது. அப்போது இருதரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், முள்ளிமுனை கிராமத்தில் கருப்பா் கோயில் திருவிழா வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவுக்கு ஒரு தரப்பினரிடம் வரி வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சாமி கும்பிடுவதில் இருதரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காகத் திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஆண்டி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மாலை கூட்டம் நடைபெற்றது. அப்போது இருதரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு தொண்டி, திருவாடானை போலீஸாா் வரவழைக்கப்பட்டு, கூட்டத்தைக் கலைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

Story image