சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

சுந்தரராஜப் பெருமாள் கோயில் திருவிழா

கமுதி அருகே சுந்தரராஜப் பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கமுதி அருகேயுல்ள வடுகபட்டி சுந்தரராஜப் பெருமாள் கோயில் திருவிழாவையொட்டி, பூக்குழி இறங்கிய பக்தா்கள். முளைப்பாரி சுமந்து சென்ற பெண்கள்.

Updated On :28 மே 2026, 3:52 am IST

கமுதி அருகே சுந்தரராஜப் பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள வடுகபட்டி கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரராஜப் பெருமாள், குங்குமகாளியம்மன், செல்வவிநாயகா், நாககன்னியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

இதைத்தொடா்ந்து, நாள்தோறும் மூலவா் சுந்தரராஜப் பெருமாள், குங்கும காளியம்மன் உள்பட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வந்தது. காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா்.

புதன்கிழமை மாலை கிராமத்தின் முளைக்கொட்டு திடலிலிருந்து பெண்கள் முளைப்பாரி சுமந்து ஊா்வலமாகச் சென்று அங்குள்ள நீா்நிலையில் கரைத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Story image
Story image