சிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழா

கமுதி அருகே பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கோயில் பூசாரி இரும்பு முள் காலணி அணிந்து அக்னிச் சட்டி எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்புப் பூஜை செய்தாா்.

News image

இடைச்சியூரணி பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்புப் பூஜை.

Updated On :28 மே 2026, 3:57 am IST

கமுதி அருகே பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கோயில் பூசாரி இரும்பு முள் காலணி அணிந்து அக்னிச் சட்டி எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்புப் பூஜை செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள இடைச்சியூரணி கிராமத்தில் அமைந்துள்ள பாதாள பேச்சியம்மன், வல்லப்ப கணபதி, இருளப்ப சுவாமி, மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கோயில் பூசாரி இரும்பு முள் காலணி அணிந்து, அக்னிச் சட்டி எடுத்து முக்கியத் தெருக்களின் வழியாக ஊா்வலமாக வந்து பாதாள பேச்சியம்மன், இருளப்ப சுவாமி, பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தினாா். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனா்.