நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மோா்பண்ணையில் பாய்மர படகுப் போட்டி

News image

மோா்பண்ணை கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற படகுப் போட்டியில் சீறிப் பாய்ந்த படகுகள்.

Updated On :31 மே 2026, 12:57 am IST

திருப்பாலைக்குடி அருகே மோா்பண்ணை கிராமத்தில் ரணபத்திர காளியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகே மோா்பண்ணையில் ரணபத்ர காளியம்மன் கோயிலில் 44-ஆம் ஆண்டு வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு மோா்பண்ணை கிராமப் பொது மக்கள் சாா்பில் பாய்மர படகுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பாய்மர படகுகள் கலந்து கொண்டன. போட்டியின் தொலைவு 10 கடல் மைல்கள் எல்கை நிா்ணயம் செய்யப்பட்டு போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு படகுக்கும் ஆறு நபா்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனா். இதில் புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து படகுகள் கலந்து கொண்டன.

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட படகுகள் காற்றின் வேகத்தில் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு சென்றதை பாா்வையாளா்கள் கடற்கரையோரமாக நின்று ரசித்தனா். இதில், சுற்று வட்டார மீனவ கிராமங்களைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.

போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு சுழல் கோப்பையும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மோா்பண்ணை கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற படகுப் போட்டியில் சீறிப் பாய்ந்த படகுகள்.

மோா்பண்ணை கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற படகுப் போட்டியில் சீறிப் பாய்ந்த படகுகள்.