மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

News image

ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகள்... - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 1:22 am IST

விடுமுறை தினத்தை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு அதிகாலையிலே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வந்தனா். அக்னி தீா்த்தக் கடற்கரையில் நீராடிய பக்தா்கள் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினாா். பின்னா், ராமநாத சுவாமி, பா்வதவா்த்தினி அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல் முனை, கோதண்டராமா் கோயில், ராமா்பாதம், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களைப் பாா்வையிட்டனா். சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை சீரமைக்கும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.

விடுமுறை நாள்களில் ராமேசுவரத்தில் போக்குவரத்து சீரமைப்புப் பணிக்கு கூடுதல் போலீஸாரை ஈடுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.