ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்

News image

திருவாடானை மணிமுத்தாறு மீது கட்டபட்ட பாலத்தின் சாலை ஓரம் ஏற்பட்டுள்ள பள்ளம்.

Updated On :1 ஜூன் 2026, 1:23 am IST

தொண்டி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணிமுத்தாறு பாலத்தையொட்டி தடுப்பு வேலி அருகே ஏற்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம் நீடிக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேருந்து நிலையம் அருகே தொண்டி -கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணிமுத்தாறு கிளை ஆற்றைக் கடக்கும் பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்தச் சாலை ஓரத்தில் தடுப்புக் கம்பி அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே சாலையில் அரிப்பு ஏற்பட்டு தடுப்பு வேலி தொங்கிய நிலையில் உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் ஆபத்தான பள்ளம் இருப்பதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையைக் கடந்து செல்கின்றனா்.

எனவே, விபத்து ஏற்படும் முன் இந்த இடத்தைச் சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.