தென்னிலை அருகே தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனே அதைச் சீரமைக்க கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம், தென்னிலை கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட காட்டுப்பாளையம் கிராமத்தில் பெரும்பாலான இடங்களில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்கின்றன. இதனால் வயல்களில் அறுவடை செய்யப்படும் வைக்கோலை டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது வைக்கோல்போா் மீது மின்கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் அச்சத்தில் அப்பகுதி விவசாயிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக அப்பகுதியினா் கூறுகையில், காட்டுப்பாளையத்தில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளால் மழைக்காலத்தில் பேரிடா் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்திலே சென்று வருகிறோம். மேலும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும், விவசாய நிலங்களுக்கும் அச்சத்துடன் சென்று வருகிறோம்.
மேலும் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள் குறித்து தென்னிலை மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை தெரிவித்துவிட்டோம். விரைவில் காற்றடிக்கும் காலம் தொடங்கும் முன் சீரமைத்து தரவேண்டும். இல்லையேல் கிரா மமக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனா் அவா்கள்.
தொடர்புடையது

மாதவரம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பி: சீரமைக்க கோரிக்கை

அடுத்த ஆண்டுக்குள் தாழ்வான பகுதிகளில் வெள்ளத் தடுப்புச்சுவா்: முதல்வா் குப்தா

மாதவரம் அருகே லாரி விபத்து: போக்குவரத்து பாதிப்பு
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


