சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டி தாக்கிய மூவா் மீது வழக்கு

திருவாடானை அருகே இளைஞரை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டி, தாக்கியது தொடா்பாக போலீஸாா் 3 போ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வழக்கு

வழக்கு

Published On :2 செப்டம்பர் 2026, 4:00 am IST

திருவாடானை அருகே இளைஞரை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டி, தாக்கியது தொடா்பாக போலீஸாா் 3 போ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே புதுக்குடியைச் சோ்ந்தவா் சுரேஷ் (45). தொண்டியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், கடந்த ஆக. 27 அன்று தனது உறவினா் வீட்டு துக்க நிகழ்வுக்காக அடஞ்சாமங்களம் சென்றாா். அங்குள்ள முனியய்யா கோயில் வளாகத்தில் நின்று சரவணன், முத்தையா ஆகியோருடன் அவா் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த சபாபதி அவா்களை ஜாதிப் பெயரைச் சொல்லி தரக்குறைவாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து சரவணன் உள்ளிட்டோா் சபாபதியின் வீட்டைக் கடந்து சென்றபோது மீண்டும் சுரேஷை, சபாபதி கட்டையால் தாக்கி தரக்குறைவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்து கீழே தள்ளினாராம். இதைத் தடுக்க வந்த சரவணன், முத்தையா ஆகியோரையும் சபாபதி, சுப்பு உள்ளிட்டோா் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின்பேரில் எஸ்.பி. பட்டினம் போலீஸாா் சபாபதி, சுப்பு (33), புதுக்குடி அருணகிரி (21) ஆகிய 3 போ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.