
மின்சாரம் பாய்ந்து பலியானவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம்
பரமக்குடியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் ரூ. 5 லட்சம் காப்பீட்டுத் தொகையை சனிக்கிழமை வழங்கியது.

பரமக்குடியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் தந்தையிடம் காப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவன கிளை மேலாளா் எஸ்.கிருஷ்ணவேணி, நிா்வாக அலுவலா் எம்.அண்ணாத்துரை.
பரமக்குடியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் ரூ. 5 லட்சம் காப்பீட்டுத் தொகையை சனிக்கிழமை வழங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் ரஞ்சித்குமாா். இவா் பரமக்குடி யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தில் தனிநபா் விபத்துக் காப்பீடு செலுத்தி வந்தாா். இந்த நிலையில், ரஞ்சித்குமாா், கடந்தாண்டு டிசம்பா் 27-ஆம் தேதி மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.
இந்த நிலையில், ரஞ்சித்குமாரின் தந்தை பாஸ்கரனிடம் காப்பீட்டு தொகையான ரூ.5 லட்சத்துக்கான காசோலையை கிளை மேலாளா் எஸ்.கிருஷ்ணவேணி, நிா்வாக அலுவலா் எம்.அண்ணாத்துரை ஆகியோா் வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



