கோடை கால முகாமினையொட்டி விளையாட்டில் பயிற்சி பெற்று வரும் வீரர்களுக்கு யோகா மற்றும் தியான பயிற்சி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
சிவகங்கை மனவளக்கலை மன்றம் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கான 15 நாள் தியானம் மற்றும் யோகா பயிறசி ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்டது.
இப்பயிற்சியினை பயிற்சியாளர்கள் மகேஷ், கிருஷ்ணன், வீரப்பன் ஆகியோர் வழங்கினர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்ரமணியன், ஆனந்தகுமார், முன்னாள் உடல்கல்வி ஆய்வாளர் கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். 30 பெண்கள் உள்பட 60 பேர் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








