ராமேசுவரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை உள்பட 230 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் 25ஆம் தேதி ரயில்வே சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு சங்கத்திற்காக ஆதரவு திரட்டினர். இதற்கு மற்றொரு சங்கத்தினர் வெளியாட்கள் உள்ளே வரக் கூடாது என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் இரு சங்கத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இந்நிலையில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சனிக்கிழமை ராமேசுவரம் தேவர் சிலை அருகே மதுரை தெற்குதொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் அண்ணாதுரை தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 230 பேர் மீது ராமேசுவரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

குதிரை பேரம்: விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்! திமுக எம்.பி. வில்சன்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

அடிமை வணிகத்தில் வாடிகனின் பங்கு! மன்னிப்புக் கோரினார் போப் லியோ!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


