அழகப்பா பல்கலை.யில் வல்லபபாய் பட்டேல் பிறந்த நாள் விழா

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சார்பில் சர்தார் வல்லபபாய் பட்டேலின் 142-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சார்பில் சர்தார் வல்லபபாய் பட்டேலின் 142-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில், பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் கே. குருநாதன் துவக்க உரையாற்றினார். பல்க லைக்கழகத்தின் ஆராய்ச்சிப்புல முதன்மையர் தா.ரா.குருமூர்த்தி சிறப்புரையாற்றினார். கலைப்புல முதன்மையர் கே. மணிமேகலை, மாணவர்கள் நலன் முதன்மையர் வி. பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.
விழாவில் சுதந்திரப்போராட்டத் தியாகி தேவகோட்டை சூறாவளி பொ. லெட்சுமணனுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
மேலும் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றிபெற்றவர்களுக்கு காந்திகிராம பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் எஸ்.எம். ராமசாமி பரிசுகள் வழங்கிப் பேசினார்.
முன்னதாக வரலாற்றுத்துறைத் தலைவர் கே. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றுப்பேசினார். முடிவில் துறையின் உதவிப்பேராசிரியர் பரந்தாமன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com