சிவகங்கை மாவட்டத்தில் வண்டல், சவடு, கிராவல் மண் ஆகியவற்றை இலவசமாக பெற விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: விவசாயம், வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டம் செய்தல் போன்ற பணிகளுக்கு அரசு புறம்போக்கு கண்மாய் மற்றும் ஊருணிகளில் படிந்துள்ள வண்டல் மண், சவடு மண், கிராவல் மண் ஆகியவற்றை இலவசமாக பெறுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் சிவகங்கையில் உள்ள உதவி இயக்குநர், வேளாண்மைத்துறை அலுவலம் அல்லது வட்டாட்சியர் அலுவலங்களில் விண்ணப்பித்து மண் அள்ளுவதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு மண் அள்ளும் போது அரசு நிர்ணயித்துள்ள அளவு மட்டுமே அள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுகுறித்து கூடுதல் விவரங்கள் பெற 89099-91077 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் . இவ்வாறு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யூத் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சினிமாவைக் காப்பாற்ற ஒரே வழி... ரசிகர்களுக்கு மமிதா பைஜு வேண்டுகோள்!

சிஎஸ்கே பேட்டிங்; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

ஆட்டோ ஓட்டி பிரசாரம் செய்த அமைச்சர் அன்பில் மகேஸ்! | DMK
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

