ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தி.பழையூர் ரயில்வே மேம்பாலம் அருகே அணுகுசாலை அமைக்கக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் தி.பழையூர் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் மதுரை-ராமேசுவரம் நான்கு

Updated On :25 டிசம்பர் 2018, 6:18 am IST

சிவகங்கை மாவட்டம் தி.பழையூர் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே அணுகுசாலை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தினிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனு விவரம்: திருப்புவனம் அருகே தி.பழையூரிலிருந்து பெரிய கண்மாய்,அய்யனார் கோவில் வழியாக அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும் தார்ச் சாலை உள்ளது.
சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக உள்ள வேளாண் நிலங்களில் விளையும் விளைப் பொருள்களை கொண்டு வருவதற்கு அந்த சாலை முக்கிய மார்க்கமாக உள்ளது. இவை தவிர, கலியாந்தூர், கொந்தகை  உள்ளிட்ட கிராமங்களுக்கு வண்டிப் (குறுக்கு) பாதையாகவும் உள்ளது.
இந்நிலையில்,அந்த சாலையில் குறுக்கிடும் மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக,தி.பழையூரிலிருந்து  வரும் சாலை மார்க்கம் தற்போது அடைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் தங்களது விளைப் பொருள்களை கொண்டு வர முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆகவே இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் தி.பழையூர் ரயில்வே மேம்பாலம் அருகே அப்  பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையில் அணுகுச் சாலை அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.