சிவகங்கை மாவட்டம் தி.பழையூர் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே அணுகுசாலை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தினிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனு விவரம்: திருப்புவனம் அருகே தி.பழையூரிலிருந்து பெரிய கண்மாய்,அய்யனார் கோவில் வழியாக அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும் தார்ச் சாலை உள்ளது.
சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக உள்ள வேளாண் நிலங்களில் விளையும் விளைப் பொருள்களை கொண்டு வருவதற்கு அந்த சாலை முக்கிய மார்க்கமாக உள்ளது. இவை தவிர, கலியாந்தூர், கொந்தகை உள்ளிட்ட கிராமங்களுக்கு வண்டிப் (குறுக்கு) பாதையாகவும் உள்ளது.
இந்நிலையில்,அந்த சாலையில் குறுக்கிடும் மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக,தி.பழையூரிலிருந்து வரும் சாலை மார்க்கம் தற்போது அடைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் தங்களது விளைப் பொருள்களை கொண்டு வர முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆகவே இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் தி.பழையூர் ரயில்வே மேம்பாலம் அருகே அப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையில் அணுகுச் சாலை அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்கம்பங்களை அகற்றாததால் பாரதிபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகளில் தொய்வு: பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

வெள்ளக்கோவில் அருகே கருங்கல் கடத்தல்: லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 68 யானைகள் உயிரிழப்பு: ஆட்சியா் தகவல்





