சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உருவாட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீபெரியநாயகியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழா கடந்த மார்ச் 21-ல் கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், வீதி உலா நடைபெற்றது.
முக்கிய விழாவான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு தைலம், மஞ்சள் பொடி, பால் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேருக்கு எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெற்றது.
விழாவில் உருவாட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தீச்சட்டி எடுத்தும், காவடி எடுத்தும், அழகு குத்தியும் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திலக் வர்மா சதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 200 ரன்கள் இலக்கு!

திமுகவுக்கு ஆதரவாக கமல் குரல்! வெளியானது தலைவன் இருக்கிறான் பாடல்!

பாஜகவின் விரோதி... அரவிந்த் கேஜரிவால் குறித்து மு.க. ஸ்டாலின்!

நியூசிலாந்தை வீழ்த்திய வங்கதேசம்; சமனில் ஒருநாள் தொடர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

