சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உருவாட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீபெரியநாயகியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழா கடந்த மார்ச் 21-ல் கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், வீதி உலா நடைபெற்றது.
முக்கிய விழாவான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு தைலம், மஞ்சள் பொடி, பால் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேருக்கு எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெற்றது.
விழாவில் உருவாட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தீச்சட்டி எடுத்தும், காவடி எடுத்தும், அழகு குத்தியும் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விவசாய நிலத்தில் மின் வயா்களால் விபத்து அபாயம்
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள், பணம் திருட்டு

அரசு மருத்துவமனையில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம்: தினமணி செய்தி எதிரொலி

ஏனாதிமங்கலம் மங்களபுரீசுவரா் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் தரிசனம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

