சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் சமேத செளந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனி திருவிழா கடந்த மார்ச் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினசரி சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் நாள்தோறும் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி, அம்மன் பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் காமதேனு, காளை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தனர். 8-ம் நாளான புதன்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. 9-ம் நாளான வியாழக்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு புஷ்பவனேஸ்வரர் மற்றும் செளந்தரநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனனைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமி அம்பாள் பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் தேருக்கு எழுந்தருளினர். காலை 10 மணியளவில் பக்தர்கள் தேரை வடம் பிடிக்க தேரோட்டம் தொடங்கியது.
கீழ் ரத வீதி, தினசரி சந்தை வளாகம், மதுரை - ராமேசுவரம் சாலை, சந்தை திடல் உள்ளிட்ட வீதிகளில் வலம் வந்த தேர் நண்பகல் 11.50 மணியளிவில் நிலைக்கு வந்தது.
விழாவில், திருப்புவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று, வெள்ளிக்கிழமை உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன் பங்குனித் திருவிழா நிறைவு பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 5 வரை சென்னை, வேலூரில் கடும் வெப்ப நிலை நிலவும்!

அதிரடியாக உயர்ந்த வர்த்தக சிலிண்டர் விலை: எவ்வளவு?

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 8 மாவட்டங்களில் மழை!

காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுக்க சட்ட தன்னாா்வ தொண்டா்களுக்கு அழைப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

