சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மானாமதுரை அருகே மாட்டுவண்டி சக்கரத்தில் சிக்கி விவசாயி சாவு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மாட்டுவண்டி சக்கரத்தில் சிக்கி விவசாயி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.

Updated On :29 மார்ச் 2018, 12:03 am

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மாட்டுவண்டி சக்கரத்தில் சிக்கி விவசாயி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
 மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி. இவரது மகன் லிங்கராஜ் (35), விவசாயியான இவர், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அருகில் உள்ள பெரியகோட்டை கள்ளர்குளம் கிராமத்திலிருந்து  குப்பை மண்ணை மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு இடைக்காட்டூருக்கு வந்து கொண்டிருந்தார். 
 அப்போது, மாட்டுவண்டியின் முன்பக்க பலகை உடைந்தது. இதில், கீழே விழுந்த லிங்கராஜ் மீது வண்டியின் சக்கரங்கள் ஏறியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.