/

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சனிக்கிழமை வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் நடத்தி வேலை நிறுத்தத்துக்கு தயாராகி வருகின்றனர்.

Updated On :21 மே 2018, 6:24 pm

சிவகங்கை மாவட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சனிக்கிழமை வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் நடத்தி வேலை நிறுத்தத்துக்கு தயாராகி வருகின்றனர்.
கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையை அமல்படுத்த வலியுறுத்தி வரும் 22 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்நிலையில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர் உள்ளிட்ட ஊர்களில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் கோட்ட நிர்வாகிகள் வேலை நிறுத்த ஆயத்தக்கூட்டம் நடத்தினர்.
அப்போது கிராமிய அஞ்சல் ஊழியர்களை வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தயார்படுத்தி வருவதாக இச்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.செல்வன் மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.