சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

சிவகங்கையில் நாளை மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

சிவகங்கையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 4) நடைபெற உள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2018, 1:35 am

சிவகங்கையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 4) நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிர்மானத்தின் மேற்பார்வை பொறியாளர் மு.சின்னையன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
சிவகங்கை கோட்டத்துக்குட்பட்ட மின்நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், சிவகங்கை கோட்டத்துக்குட்பட்ட மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின்சார வாரியம் தொடர்பான புகார்களை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம். 
அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.