மறவமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கிருஷ்ண ஜயந்தி ஊர்வலத்தை சிலர் தடுத்து நிறுத்தியதை அடுத்து, அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ண ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு கிருஷ்ணர் ஊர்வலம் நடைபெற்றது.
வழக்கம் போல மேலத்தெருவில் உள்ள கோயில் முன்பு தொடங்கும் ஊர்வலம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்த பின்னர் கோயிலில் நிறைவு பெறுவது வழக்கம்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊர்வலம் நடைபெற்ற போது, சிலர் பேருந்து நிலையம் பகுதிகளுக்குள் ஊர்வலம் வரக்கூடாது என தெரிவித்துள்ளனர். இதனால் ஊர்வலத்தில் பங்கேற்ற பொதுமக்கள் அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறவமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காளையார்கோவில் போலீஸார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி, ஏற்கெனவே திட்டமிட்ட பாதை வழியாக ஊர்வலத்தை நடத்துவதற்கு அனுமதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு!

மிட்செல் சாண்ட்னர் ஒரு மாதம் கிரிக்கெட் விளையாட மாட்டார்: நியூசி. கிரிக்கெட் வாரியம்

ம.பி. படகு விபத்து; 9 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!

ரியோ ராஜ் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் அறிமுக போஸ்டர்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

