98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

மறவமங்கலத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

மறவமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கிருஷ்ண ஜயந்தி ஊர்வலத்தை சிலர் தடுத்து நிறுத்தியதை அடுத்து, அப்பகுதி  பொதுமக்கள் சாலை  மறியலில் ஈடுபட்டனர்.   

Updated On :3 செப்டம்பர் 2018, 1:32 am

மறவமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கிருஷ்ண ஜயந்தி ஊர்வலத்தை சிலர் தடுத்து நிறுத்தியதை அடுத்து, அப்பகுதி  பொதுமக்கள் சாலை  மறியலில் ஈடுபட்டனர்.   
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ண ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு கிருஷ்ணர் ஊர்வலம் நடைபெற்றது. 
வழக்கம் போல மேலத்தெருவில் உள்ள கோயில் முன்பு தொடங்கும் ஊர்வலம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்த பின்னர் கோயிலில் நிறைவு  பெறுவது வழக்கம்.  
ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊர்வலம் நடைபெற்ற போது, சிலர்  பேருந்து நிலையம் பகுதிகளுக்குள் ஊர்வலம் வரக்கூடாது என தெரிவித்துள்ளனர். இதனால்  ஊர்வலத்தில் பங்கேற்ற பொதுமக்கள் அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறவமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 
  தகவலறிந்து வந்த காளையார்கோவில் போலீஸார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி, ஏற்கெனவே திட்டமிட்ட பாதை வழியாக ஊர்வலத்தை நடத்துவதற்கு அனுமதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.