குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சிவகங்கை அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து: 25 பேர் காயம்

சிவகங்கை அருகே புதன்கிழமை சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25  பேர் காயமடைந்தனர். 

Updated On :24 ஜனவரி 2019, 12:44 am IST

சிவகங்கை அருகே புதன்கிழமை சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25  பேர் காயமடைந்தனர். 
சிவகங்கை மாவட்டம் மாடக்கோட்டையைச் சேர்ந்த சுந்தரராஜ் (67), குமார் மனைவி மணிமுத்து (37), சேவுகன் (35), கணேசன் (50), மாணிக்கம் (45), சரண்(15) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் சிவகங்கையில் உள்ள சிவன் கோயிலில் நடைபெற்ற திருமண விழாவுக்காக சரக்கு வேனில் புதன்கிழமை சென்றுள்ளனர். திருமண விழா முடிந்த பின்னர் மாடக்கோட்டைக்கு திரும்பியுள்ளனர். 
வாகனத்தை சிவகங்கையைச் சேர்ந்த ராஜ்குமார்  ஓட்டிச் சென்றுள்ளார். சிவகங்கை-மானாமதுரை சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டனி அருகே சரக்கு வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுந்தரராஜ், மணிமுத்து உள்பட 25 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை நகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனைவரையும் மீட்டு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், படுகாயமடைந்த சுந்தரராஜ், மணிமுத்து ஆகிய இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள சேவுகன், கணேசன் உள்ளிட்ட 23 பேர் சிவகங்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.