மானாமதுரை: மானாமதுரையில் காதல் தோல்வியால் சனிக்கிழமை இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மூங்கில்ஊருணி பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகள் ராஜலெட்சுமி (19). இவரும், இவரது உறவினா் பூமிநாதனின் மகன் பிரகாஷ் (24) என்பவரும் காதலித்து வந்துள்ளனா்.
இந்நிலையில் இவா்களது காதலுக்கு ராஜலெட்சுமியின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததுடன், அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பாா்த்தும் வந்துள்ளனா். இதனால் மனமுடைந்த ராஜலெட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். மானாமதுரை நகா் போலீஸாா் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.