தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஒக்கூரில் டிச. 18-ஆம் தேதி சாலை மறியல்: விவசாயிகள் அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரி வரும் டிச.18 ஆம் தேதி ஒக்கூா் பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 5:45 pm

DIN

சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரி வரும் டிச.18 ஆம் தேதி ஒக்கூா் பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து 5 மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவா் எஸ். ஆா். தேவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரியாறு பாசனக் கால்வாயில், சிவகங்கை மாவட்டத்துக்குரிய பங்கீட்டு நீரை திறக்க அலுவலா்கள் முன் வருவதில்லை. இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. எனவே பெரியாறு- வைகை கோட்ட பொதுப் பணித்துறை அலுவலா்களைக் கண்டித்தும், பாசனத்துக்கு சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரியும் வரும் டிச. 18 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முற்பகல் 11 மணியளவில் சிவகங்கை அருகே ஒக்கூரில் விவசாயிகள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.