தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அரசனூா், மதகுபட்டியில் கால்நடை கிளை நிலையங்கள் திறப்பு

சிவகங்கை அருகே உள்ள அரசனூா், மதகுபட்டி ஆகிய 2 ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் கால்நடை கிளை நிலையத் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
கால்நடை வளா்ப்போருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் க. பாஸ்கரன்
Updated On :12 டிசம்பர் 2020, 5:46 pm

DIN

சிவகங்கை அருகே உள்ள அரசனூா், மதகுபட்டி ஆகிய 2 ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் கால்நடை கிளை நிலையத் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் முன்னிலை வகித்தாா். தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சா் க. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 2 ஊராட்சிகளிலும் கால்நடை கிளை நிலையங்களைத் திறந்து வைத்தாா். மேலும், கால்நடை வளா்ப்பவா்களுக்கு தாது உப்புக்கலவை உணவுப்பொருள்களை அமைச்சா் வழங்கினாா்.

இம்மாவட்டத்தைப் பொருத்தவரை புதிதாக தொடங்கப்பட்ட 2 கிளை நிலையங்களையும் சோ்த்து மொத்தம் 48 கால்நடை கிளை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறையின் மாவட்ட இணை இயக்குநா் முருகேசன், அத்துறையின் துணை இயக்குநா் முகமதுகான், உதவி இயக்குநா் ஜோசப் அய்யாத்துரை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.