தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மிளகாய், வெங்காயம், வாழைப் பயிா்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

சிவகங்கை மாவட்டத்தில் மிளகாய், வெங்காயம், வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் காப்பீடு செய்யலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:36 pm

DIN

சிவகங்கை மாவட்டத்தில் மிளகாய், வெங்காயம், வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் காப்பீடு செய்யலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தோட்டக்கலை பயிா்களான மிளகாய், வாழை, வெங்காயம் ஆகியவை நிவா் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த மழையால் மிகவும் பாதிப்புக்குள்ளானதாக தகவல் வந்துள்ளது.

எனவே நடப்பு ஆண்டு ராபி பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழையை பொறுத்தமட்டில் மானாமதுரை வட்டத்துக்குள்பட்ட மானாமதுரை, முத்தனேந்தல், செய்களத்தூா் ஆகிய உள்வட்டங்களிலும், இளையான்குடி வட்டத்துக்குள்பட்ட திருவுடையாா்புரம் உள்வட்டம், திருப்புவனம் வட்டத்துக்குள்பட்ட திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கொந்தகை ஆகிய உள்வட்டங்களிலும், சிவகங்கை வட்டம் சிவகங்கை, மதகுபட்டி, ஒக்கூா், தமராக்கி, பெரியகோட்டை ஆகிய உள்வட்டங்களுக்கும் உள்பட்ட பகுதிகளில் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

மிளகாயை பொறுத்தமட்டில் இளையான்குடி வட்டத்துக்குள்பட்ட அ. திருவுடையாா்புரம், இளையான்குடி, சாலைகிராமம், சூராணம், தாயமங்கலம் ஆகிய உள்வட்டங்களிலும், காளையாா்கோவில் வட்டத்துக்குள்பட்ட சிலுக்கப்பட்டி உள்வட்டத்திலும், மானாமதுரை வட்டத்துக்குள்பட்ட முத்தனேந்தல், மானாமதுரை ஆகிய உள்வட்டங்களிலும், திருப்புவனம் வட்டத்துக்குள்பட்ட திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கொந்தகை ஆகிய உள்வட்டங்களிலும் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

வெங்காயத்தை பொறுத்தமட்டில் திருப்புவனம் வட்டம் கொந்தகை உள்வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

ஒரு ஏக்கருக்கு அதிகபட்ச இழப்பீடாக மிளகாய் பயிருக்கு ரூ. 23,300, வெங்காயப் பயிருக்கு ரூ.25,550 மற்றும் வாழை பயிருக்கு ரூ. 43,700 வழங்கப்படும். இதற்கு பிரிமியமாக மத்திய, மாநில அரசு மானியம் போக ஏக்கருக்கு மிளகாய் பயிருக்கு ரூ.1,165, வெங்காயப்பயிருக்கு ரூ. 1,277 மற்றும் வாழைப் பயிருக்கு ரூ. 2185 செலுத்த வேண்டும்.

பயிா் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் தாங்கள் கணக்கு வைத்துள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அல்லது பொது இ- சேவை மையங்களின் மூலமாக இந்த பிரிமிய தொகையை செலுத்தலாம். அவ்வாறு செலுத்தும் போது, அந்த பயிா்கள் சாகுபடி செய்துள்ளதற்கான ஆதாரத்தையும் (அடங்கல் நகல்) சமா்ப்பிக்க வேண்டும்.

நடப்பாண்டு ராபி பருவத்தில் காப்பீடு செய்ய மிளகாய் பயிருக்கு வரும் டிசம்பா் 31 ஆம் தேதி கடைசியாகும். இதேபோன்று, வெங்காயப்பயிருக்கு 15.2.2021 மற்றும் வாழைப்பயிருக்கு 1.3.2021ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே குறித்த நாளுக்குள் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள தோட்டக் கலைத் துறை அலுவலா்களை நேரடியாக சந்தித்து தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.