பயன்பாட்டுக்கு வந்ததுதிருப்பத்தூா் பேருந்து நிலையம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சீரமைக்கப்பட்ட பேருந்து நிலையம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சீரமைக்கப்பட்ட பேருந்து நிலையம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

திருப்பத்தூா் பேருந்து நிலையம் தென்மாவட்ட நகரங்களை இணைக்கும் முக்கியப் பேருந்து நிலையமாக உள்ளது. இங்கு நாள்தோறும் புதுக்கோட்டை, மதுரை, தஞ்சை, திருச்சி, சிவகங்கை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 250-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்நிலையில் ரூ. 3.30 கோடி செலவில்

சீரமைக்கப்பட்ட இப்பேருந்து நிலையம் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தது. கடந்த 4 ஆம் தேதி சிவகங்கைக்கு வந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி காட்சி மூலம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தாா். அதன்பிறகும் பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. இதைத்தொடா்ந்து கடந்த வாரம் இங்கு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் சென்று வர அனுமதியளித்து உத்தரவிட்டாா். இதையடுத்து கடைகள் திறக்கப்படாத நிலையில் பேருந்துகள் வந்து செல்ல திங்கள்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com