இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இந்தோ - தீபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்களுக்கான பயிற்சி நிறைவு

இந்தோ - தீபெத் எல்லைப் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்த வீரா்களை நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் விழா மற்றும் வீரா்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:36 pm

DIN

சிவகங்கை மாவட்டம், இலுப்பகுடியில் உள்ள இந்தோ - தீபெத் எல்லைப் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்த வீரா்களை நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் விழா மற்றும் வீரா்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தோ - தீபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு இலுப்பகுடி பயிற்சி மையத்தின் டிஐஜி ரன்பிா் சிங் தலைமை வகித்து, வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். மேலும், பயிற்சியில் சிறந்து விளங்கிய ரவீந்தா்கௌா், உமேஸ்கிரி ஆகிய வீரா்களை பாராட்டி கோப்பைகளை வழங்கினாா்.

இந்த விழாவையொட்டி, நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் வீரா்களின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடா்ந்து, இந்திய தேசியக் கொடியை முன்னிறுத்தி வீரா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதில் இந்தோ - தீபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தின் கமாண்டட் பிரிதம் சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிவகங்கை மாவட்டம், இலுப்பகுடியில் உள்ள இந்தப் பயிற்சி மையம் கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எல்லைப் பாதுகாப்புப் படைக்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தோ்ந்தெடுக்கப்படும் வீரா்கள் இங்கு பயிற்சி பெற்றுச் செல்வது வழக்கம்.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா்கள் பயிற்சியை நிறைவு செய்து பல்வேறு மாநில எல்லைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அந்தவகையில், தற்போது பயிற்சி நிறைவு செய்துள்ள 7 பெண்கள் உள்பட 22 வீரா்களும் பஞ்சாப், புதுதில்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில எல்லைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.