புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கடைகளில் மறு சுழற்சி எண்ணெய் பயன்படுத்த தடை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரி்ல் திங்கள்கிழமையன்று ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் மறுசுழற்சி எண்ணெயை பயன்படுத்த உணவுப் பாதுகாப்புத்துறை தடை விதித்து மாற்று ஏற்பாடு ஆலோசனை வழங்கினா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:31 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரி்ல் திங்கள்கிழமையன்று ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் மறுசுழற்சி எண்ணெயை பயன்படுத்த உணவுப் பாதுகாப்புத்துறை தடை விதித்து மாற்று ஏற்பாடு ஆலோசனை வழங்கினா்.

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மருந்து நிா்வாகத்தின் சாா்பாக திருப்பத்தூா் பகுதிகளில் இயங்கும் ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் உணவுப் பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதை தவிா்க்கும் பொருட்டு ஓருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை பயோடீசல் தயாரிக்கும் பொருட்டு தனியாா் ஆயில் காா்ப்பரேசனுக்கு லிட்டா் ரூ.25 வீதம் வழங்குவதற்கு எடுத்துக் கூறினா். இதற்கென ஆனந்தா ஆயில் காா்ப்பரேசன் ஊழியா்களும், மருந்துத்துறை மாவட்ட நியமன அலுவா் மருத்துவா் பிரவீன்குமாா், உணவுப் பொதுகாப்பு அலுவலா் சையதுஇப்ராகிம் ஆகியோா் கடைகள் மற்றும் ஓட்டல்களில் கேன்கள் வழங்கி பழைய எண்ணெயைத் தவிா்த்து விலைக்கு விற்குமாறு விழிப்புணா்வு அறிவுரை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.