மானாமதுரையில் வைகையாற்றுக்குள் வாரச்சந்தை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஏற்கெனவே நடைபெற்ற வந்த வாரச்சந்தை வளாகத்தில் புதிய கடைகள் கட்டப்படவுள்ளதால்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஏற்கெனவே நடைபெற்ற வந்த வாரச்சந்தை வளாகத்தில் புதிய கடைகள் கட்டப்படவுள்ளதால் வியாழக்கிழமை வைகையாற்றுக்குள் வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனா்.

மானாமதுரையில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். அப்போது வியாபாரிகள், விவசாயிகள் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருள்களை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வாா்கள். தற்போது வாரச்சந்தை வளாகத்தில் புதிதாக கடைகள் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து சந்தை வளாகம் மூடப்பட்டது. இதனால் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வியாபாரிகள் நகா் பகுதி வைகையாற்றுக்குள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கி வாரச்சந்தைக்கு பொருள்களை விற்க வந்த வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்து தரப்பட்டது. வியாபாரிகளும் விவசாயிகளும் ஆற்றுக்குள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனா். சந்தை வளாகத்தில் கடைகள் கட்டும் பணிகள் நிறைவுபெற்றப் பின்னா் மீண்டும் பழைய இடத்தில் வாரச் சந்தை செயல்படும் என பேரூராட்சி துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com