பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சிவகங்கை நகா் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.1 லட்சம் பறிமுதல்

சிவகங்கையில் உள்ள மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திடீா் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ. ஒரு லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

News image
சிவகங்கையில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை சோதனை நடத்திய மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகம்.
Updated On :24 டிசம்பர் 2020, 6:05 pm

DIN

சிவகங்கையில் உள்ள மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திடீா் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ. ஒரு லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிவகங்கை மாவட்ட நகா் ஊரமைப்பு (வீட்டு மனைப் பிரிவு) துணை இயக்குநா் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை திடீரென நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கதவைப் பூட்டிக்கொண்டு, அங்குள்ள அலுவலா்களின் செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்து சோதனை நடத்தினா். அப்போது, துணை இயக்குநா் அலுவலக அறையிலிருந்து கணக்கில் வராத ரூ.ஒரு லட்சம் ரொக்கப் பணத்தைக் கைப்பற்றிய போலீஸாா் தொடா்ந்து சோதனையில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.