ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சிவகங்கை மாவட்டத்தில் வரும் ஆக. 1 முதல் கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் வரும் ஆக. 1 ஆம் தேதி முதல் கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :29 ஜூலை 2020, 5:49 pm

DIN

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் வரும் ஆக. 1 ஆம் தேதி முதல் கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செயற்கை முறை கருவூட்டலின் வழி நாட்டின மாடுகளின் இனப் பெருக்கத் திறனை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு தேசிய செயற்கை முறை கருவூட்டல் திட்டம் பகுதி-2 ஐ செயல்படுத்தி வருகிறது. நடப்பாண்டு இத்திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்துக்கு கிராமம் ஒன்றுக்கு 100 பசுக்கள் என்ற வீதத்தில் 500 கிராமங்கள் குறியீடாக வழங்கப் பெற்றுள்ளது.

இத்திட்டம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் மாடு வளா்ப்போரின் வீடுகளுக்கே சென்று இலவசமாக கால்நடைத் துறையின் தொழில்நுட்ப வல்லுநா்களால் செயற்கை முறை கருவூட்டல் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகவே, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கி பயன்பெறலாம். இதுதொடா்பான கூடுதல் தகவல்களுக்கு 94450 32581, 94450 32556 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.