மானாமதுரையைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளருக்கு கரோனா தொற்று உறுதி
சென்னை சென்று வந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளருக்கு செவ்வாய்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு


சென்னை சென்று வந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளருக்கு செவ்வாய்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மானாமதுரையில் சிவகங்கை சாலையில் சாஸ்தாநகரில் வசித்து வரும் 52 வயது நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர் தற்போது மதுரையில் அரசு போக்குவரத்துக்குழக பணிமனையில் கிளை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சென்று அங்கிருந்த தனது மகளை மானாமதுரைக்கு காரில் அழைத்து வந்துள்ளார்.
அதன்பின் தொண்டையில் வலி இருப்பதை உணர்ந்த இவர் சந்தேகப்பட்டு மதுரைக்கு பரிசோதனைக்காக மருத்துவனைக்குச் சென்றார். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு கரேனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து இவர் சிவகங்கையில் அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் இவரது குடும்பத்தினரை முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவத்துறையினர் பரிசோதனைக்கு வருமாறு அழைத்து அவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...