பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

உண்டியல் பணத்தை முதல்வர் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரம் தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற

News image
Updated On :17 மே 2020, 1:47 pm

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரம் தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருளாக உண்டியல் வழங்கப்பட்டது. 

அதனை பரிசாக பெற்ற எட்டாம் வகுப்பு மாணவி சந்தியா தனது பெற்றோர் வழங்கிய தொகையை சிறுக சிறுக சேமித்து வைத்திருந்தார். இன்று பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுருநாதனிடம் தான் உண்டியல் மூலம் சேமித்து வைத்திருந்த ரூ 1048-ஐ கொடுத்து கரோனா நிவாரண நிதியாக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். 

தலைமை ஆசிரியர் மாணவியின் தாயார் திருமதி ராஜலெட்சுமியை தொடர்பு கொண்டு தங்களது மகள் சந்தியா உண்டியலில் சேமித்த தொகையை கரோனா நிவாரணமாக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க சொல்கிறார் சம்மதமா என்று கேட்டார்.

தாயாரும் வழங்க உதவி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் மாணவி கொடுத்த சேமிப்பான சில்லறை காசுகளை பெற்று கொண்டு முதல்வர் நிவாரண நிதிக்கு இணையதளம் மூலம் ரூ 1048 அனுப்பி அதற்கான ரசீது பெற்று கொண்டு மாணவி சந்தியாவின் கருணை உள்ளத்தை பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.