காரைக்குடியில் நிவாரணம் கோரி ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்           

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி அருகேயுள்ள ஆட்டோ நிறுத்தத்தில் ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்குடியில் நிவாரணம் கோரி ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்           
Published on
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி அருகேயுள்ள ஆட்டோ நிறுத்தத்தில் ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நடைமுறையில் உள்ள பொதுமுடக்கத்தின் போது ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரு. 7,500 வழங்க வேண்டும், எப்.சி பதிவதை நிறுத்தி வைக்க வேண்டும், ஆட்டோ தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யாத ஆட்டோ தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் சங்கத்தின் நகரச் செயலாளர் அமானுல்லா தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சிவாஜி காந்தி சிறப்புரையாற் றினார். கிளைச் செயலாளர் மெய்யர், இமாம் ஹசன் அலி, பாலாஜி, தாஜீ தீன், வினோத்குமார், குமார், ராஜேஷ், ரமேஷ், முகிலரசன், விக்னேஷ் மணி, தினேஷ் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் கலந்துகொன்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com