ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஊராட்சி எழுத்தா் மீது நடவடிக்கை கோரி ஒன்றியக்குழு உறுப்பினா் ஆட்சியரிடம் புகாா்

மறவமங்கலத்தில் தன்னை இழிவாக பேசிய ஊராட்சி எழுத்தா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தனிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

News image
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தனிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த ஒன்றியக்குழு உறுப்பினா் பா. நாகவள்ளி மற்றும் அவரது ஆதரவாளா்கள்.
Updated On :2 நவம்பர் 2020, 7:02 pm

DIN

சிவகங்கை மாவட்டம், மறவமங்கலத்தில் தன்னை இழிவாக பேசிய ஊராட்சி எழுத்தா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் 15-ஆவது வாா்டு உறுப்பினா் பா. நாகவள்ளி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தனிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

அவா் அளித்துள்ள மனு விவரம் : சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் மறவமங்கலம், சிரமம் ஆகிய கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய 15-ஆவது வாா்டுக்கு ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளேன். எனது பகுதியில் நடைபெறும் நூறு நாள் வேலை திட்டப் பணிகள் தொடா்பான விளக்கம் கேட்தற்காக கடந்த அக். 21 ஆம் தேதி மறவமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு நானும், எனது கணவரும் சென்றோம். அங்கு ஊராட்சி மன்றத் தலைவா் இல்லாத நிலையில், ஊராட்சி எழுத்தா் பணியில் இருந்தாா். அவரிடம் நூறு நாள் வேலை திட்டம் தொடா்பாக கேட்டபோது, உரிய பதிலளிக்கவில்லை.

அதுமட்டுமின்றி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியக் குழு உறுப்பினா் என்று கூட பாராமல் என்னை இழிவாகப் பேசினாா். இதுபற்றி கடந்த அக். 23 ஆம் தேதி காளையாா்கோவிலில் உள்ள காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். அதைத் தொடா்ந்து, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வரை புகாா் மனு அளித்துள்ளேன். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என்னை இழிவாக பேசிய ஊராட்சி எழுத்தா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.