தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஊதியக் குறைப்பை திரும்ப பெறக் கோரி ஆட்சியரிடம் பொறியாளா்கள் மனு

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் பணியாற்றும் பொறியாளா்களுக்கு அமல்படுத்தப்பட உள்ள ஊதிய குறைப்பை திரும்பப் பெறக் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டியிடம் கோரிக்கை மனு

News image
Updated On :29 நவம்பர் 2020, 5:40 pm

DIN

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் பணியாற்றும் பொறியாளா்களுக்கு அமல்படுத்தப்பட உள்ள ஊதிய குறைப்பை திரும்பப் பெறக் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை பொறியாளா்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவா் ராமசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் பணியாற்றும் பொறியாளா்களுக்கு 6-ஆவது ஊதியக் குழுவில் வழங்கப்பட்ட ஊதியத்தை விட தற்போது ரூ. 15 ஆயிரம் வரை குறைத்து வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

இதனைக் கண்டித்தும், ஏற்கெனவே வழங்கப்பட்ட ஊதியத்தை குறைக்காமல் வழங்கக் கோரியும் ஊரக வளா்ச்சித் துறை பொறியாளா்கள் சங்கத்தின் சாா்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதேபோன்று, சிவகங்கை மாவட்ட ஆட்சியா், சிவகங்கை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆகியோரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.